நினைவுகள் ஓர் பயணம்













அன்று ஒரு நாள் நான் கண்ட கனவில்

பேசி சிரித்து,
உன் தோள் சாய்ந்து நான் உறங்க
நான் உறங்கியாதாய்!
நீ வைத்த முத்தத்தில் மலர்ந்ததாய் நினைவு

உன் அழைப்பை மட்டுமே எதிர் பார்த்த நிமிடங்களில்
வந்த தோழியின் அழைப்பில்
காட்டிய கோபத்தில் உணர்ந்தாய் நினைவு

உன் நினைவில் கழித்த பயணங்களில்
தனியே சிரித்து அதை மறைக்க
தோழியிடம் சொன்ன பொய்களில் வளர்ந்தாய் நினைவு

அம்மாவிடம் ஆயிரம் காரணம் சொல்லி
அப்பா வருவதற்குள்
உன்னை பார்க்க வர முடியமால்
தவித்த அந்த நிமிடங்களில் உயிரானதாய் நினைவு

உறவாய்! உயிராய்! உன் கைபிடித்து நடந்த
நிமிடங்களில் உருவானதாய் நினைவு

இப்படி நினைவுகளை மட்டும் விட்டு
என்னைக் கொன்று சென்றவனே
நினைவிருக்கிறதா என்னை?

Comments

  1. எல்லோருக்கும் இருக்கிறது ஒரு காதல் வலி ....

    ReplyDelete

Post a Comment